மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 ஜூலை, 2011

2041 ல் பத்மநாபா சாமி கோவில்

ஒரு சராசரி இந்திய குடிமகனின் என்ன ஓட்டங்கள்.


2041 ல் பத்மநாபா சாமி கோவில் ரகசிய அறைகளின் வாயிலில் இருவர்:முப்பது வருஷம் முன்னாடி இங்கதான் முந்நூறு வருஷமா கட்டி காத்த பல லட்சம் கோடி மதிப்புள்ள நகைங்கள கண்டுபிடிசாங்கலாம்.இப்ப அந்த காணாம போன நகைங்கள கண்டுப்பிடிக்கதான் விசாரணை கமிஷன் அமைச்சிருக்காங்க.

செவ்வாய், 21 ஜூன், 2011




தமிழீழப் படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை, பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிக வலிமையாக உணர்த்தும். எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.


கடந்த மே 18-ம் தேதி அன்று மெரினாவில் ஈழப் படுகொலைகள் நினைவாக மெழுகு திரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.



ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம்.

*பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.


இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச் செய்யுங்கள்.


இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஈழத்தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம் http://candlelightfortamils.blogspot.com

lightacandlefortam...@gmail.com

lightacandlefortamils@googlegroups.com

http://groups.google.com/group/lightacandlefortamils

வேண்டுகோள் :

அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் அனைவர்க்கும் அன்பு வணக்கம்.. வரும் ஜூன் 26 அன்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் அஞ்சலி நிகழ்விற்கான வலைமனை பட்டை இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கிறது அதனை தங்கள் வலைத்தளத்தில் ஜூன் 26 வரைக்கும் வைத்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்..

மேலும் துண்டுப் பிரசுரத்திற்கான நகல் ஒன்றும் இணைத்துள்ளோம். அதனை தேவைபடுகிற அன்பர்கள் பயண்டுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள் : ஜூன் 26
நேரம் : மாலை 5 மணி
இடம் : மெரினா கண்ணகி சிலை



Read more: http://truetamilans.blogspot.com/#ixzz1PsyNliKd

புதன், 26 ஜனவரி, 2011

குடியரசு தினம் கொண்டாட யோக்யத இருக்கா

குடியரசு தினம் கொண்டாட யோக்யத இருக்கா இந்த மானம் கேட்ட நாட்டுக்கு இங்க தினம் ஒரு மீனவன சாகடித்து வெறியேற்றும் சிங்கள ..........பசங்கள ஒரு .............ம் புடுங்க முடியல.முப்படைகளின் அணிவகுப்பை டிவி ல பாக்கும்போது அந்த வீரர்களை பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.யாரை பாதுகாக்க இவர்கள் பணி செய்கிறார்கள்?ஊழல் அரசியல்வாதிகளையும்,கருப்பு பண அதிபர்களையும்,ஜில் ஜில் ரமாமணி களையும் பாதுகாக்க தானே.சோனியாவின் அடிமை பிரதிபா பாட்டிலை பார்த்து அவர்கள் அடிக்கும் சல்யூட் கூட பார்க்க சகிக்காததாகவே இருந்தது.இப்படியே போனா மக்களே சீனாக்காரன சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்க போறாங்க.நாஸ்டர்டாம் கூற்றுப்படி இந்திய வை மஞ்சள் இனத்தவர்கள் ஆள்வார்கள் என கூறப்பட்டுள்ளது இங்குள்ள சூழலும் அதற்கேற்ப தான் உள்ளது.

வியாழன், 9 டிசம்பர், 2010

மிஷ்கின் வழியில் நந்தலாலா பற்றி....

                                                        
செய்தி:நந்தலாலா ஜப்பானிய படமான கிகுஜிரோ வின்      தழுவல்.ஆனால்,மிஷ்கின் நல்லா எடுத்திருக்கார்.
மிஸ்டர் பொதுஜனம்:"குடும்பம்லாம் நல்லாத்தான் நடத்தறான்.ஆனா,அவன் குடும்பம் நடத்தற பொண்ணு பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி"அப்படின்ற மாதிரி இல்ல இருக்கு.

புதன், 8 டிசம்பர், 2010

2010 மதிப்பீடுகள்.பாகம் 1

                                                                 

சிறந்த படம்:விண்ணை தாண்டி வருவாயா.
சிறந்த இயக்கம்:கெளதம் மேனன்(விண்ணை தாண்டி வருவாயா)
சிறந்த ஒளிப்பதிவு:மனோஜ் பரமஹம்சா(விண்ணை தாண்டி வருவாயா)
சிறந்த இசையமைப்பு:எ ஆர் ரஹ்மான்(விண்ணை தாண்டி வருவாயா)
சிறந்த பின்னணி இசை:இளையராஜா(நந்தலாலா)
சிறந்த நடிகர்:சிம்பு(விண்ணை தாண்டி வருவாயா)
சிறந்த நடிகை:த்ரிஷா(விண்ணை தாண்டி வருவாயா),அஞ்சலி(அங்காடி தெரு)
சிறந்த குணசித்திர நடிகர்:இளவரசு(களவானி)
சிறந்த குணசித்திர நடிகை:சரண்யா(களவானி)
சிறந்த வில்லன் நடிகர்:ரவி பிரகாஷ்(நான் மகான் அல்ல),திருமுருகன்(களவானி) 
சிறந்த தயாரிப்பாளர்:ஷாலோம் ஸ்டுடியோஸ்(மைனா) 
சிறந்த புதுமுக நடிகர்:விதார்த்(மைனா)
சிறந்த புதுமுக நடிகை:அமலா பால். 
சிறந்த புதுமுக இயக்குனர்:சற்குணம்(களவானி)
சிறந்த காமெடியன்:கஞ்சா கருப்பு(களவானி)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்:களவானி. 
                                                                                                   தொடரும்.......

சனி, 13 நவம்பர், 2010

kaanaamal ponavarkal.

அடிக்கடி,சுடச்சுட,இப்படி பேரு வச்சிக்கிட்டு பதிவுலகை கலக்கிய அண்ணன்கள் உதயசூரியன்,அந்தணன் ஆகிய இருவரை கண்டு பிடித்து பதிவு போட வைப்பவர்களுக்கு வருகின்ற எலக்ஷன் ல வோட்க்கு ரூ௧௦௦௦ அதிகப்படியாக வாங்கித்தரப்படும்.

வெள்ளி, 12 நவம்பர், 2010

pothu arivippu.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால் இன்று முதல் பதிவுலகை சலசலக்க வைக்க புறப்பட்டு விட்டான் ஜெயராம்ப்ரகாஷ் .[கஷ்ட காலம் த சாமீ]எல்லோருக்கும் வணக்கம்.